பக்கங்கள்

வெள்ளி, 2 ஜூலை, 2010

கருவில் குழந்தை வளர்ச்சி....

இந்த உரலியை கோப்பி செய்து பேஸ்ட் செய்யவும்..... http://www.youtube.com/watch?v=KXRbV33J5qk

கர்ப்ப காலங்களில் ஏற்படும்சில மாற்றங்கள்

*

பெண்கள் கருத்தரிப்பது என்பது அவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான அம்சமாகும்.
அதுவும் முதல் பிரசவம் என்றால் எல்லா விடயமும் வித்தியாசமாகவும்,
சந்தேகத்துடனும், விளங்காத புதிராக இருக்கும். கர்ப்பகாலத்தில் இயற்கையாக
ஏற்படும் சில சின்ன பிரச்சினை கூட பெரிய பிரச்சினையாக தோன்றும். அதே போல சில
அரிய உடல்மாற்றங்களும் ஏற்படுவதுண்டு. ஆகையால் கருத்தரிக்கவேண்டும் எனத்
திட்டமிடும் போதிலிருந்தே சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அவற்றை சுருக்கமாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

*ஆலோசனை பெறுதல்* : இதுதான் கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக
முக்கியம். கருத்தரிக்கும் முன்பு என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
எப்போது கருத்தரிக்கும் என்பன போன்ற விவரங்களையும், பாதுகாப்பான முறைகளையும்
தெரிந்து கொள்ள வேண்டும்.
*மாதவிலக்கு தள்ளிப்போதல்* : கர்ப்பத்தின் அடையாளம் இது. மருந்து மாத்திரைகளின்
பக்கவிளைவாலும் இப்படி நேரிடலாம். அடுத்த விலக்குவரும் வரை பொறுத்திருந்து
கர்ப்பமானதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

*பிரசவ காலம்* : கடைசி மாதவிலக்கின் முதல் நாளிலிருந்து கர்ப்ப காலம் கணக்கிடப்
படுகிறது. சரியான பிரசவ காலத்தை தெரிந்துக் கொள்ள, கடைசியாக உங்களுக்கு
மாதவிலக்கு எப்போது ஆனது என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

*உணவு*: தாய் போதுமான ஊட்டச் சத்துள்ள உணவுகளை உட்கொண்டால்தான் பிறக்கப்
போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹோர்மோன்
மாற்றங்களால் உணவில் மீது வித்தியாசமான ஆசைகள் ஏற்படலாம். புளிப்பான சுவை கொண்ட
உணவுகளை அதிகம் விரும்புவர். முதல் சில மாதங்கள் மசக்கை இருப்பதால்
சாப்பிடப்பிடிக்காது. புளிப்பு சுவை கர்ப்பகாலத்தில் அதிகமாக சாப்பிடுவது
உடலுக்கு கேடானது என்பதை அறிந்து தவிர்த்து விட வேண்டும். காய்கறிகள், பழங்
கள், நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியம்.
**
*இரத்த சோகை* : கருக் காலத்தில் குழந்தை ஒட்சிசன், ஊட்டம் போன்றவை தாயின்
இரத்திலிருந்தே அனுப்பப்படுகிறது. எனவே தாய்க்கு கூடுதலான இரத்த உற்பத்தி
இருக்க வேண்டும். பழங்கள், கீரைகள் போன்றவற்றை நிறைய சாப்பிட்டால் இரத்த
உற்பத்தியும் ஊட்டமும் கிடைக்கும். இல்லா விட்டால் இரத்த சோகை ஏற்படும். இது
கர்ப்பிணிக்கு மட்டுமின்றி கருவுக்கும் ஆபத்தை தரும். இரும்புச்சத்து, பாலிக்
அமில மாத்திரைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

* கல்சியம்* : குழந்தையின் எலும்பு, பல் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு
கால்சியம் சத்து தேவை, பால், பால் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

*வலிகள் *: கருப்பை வளர்த்து முன்னே தள்ளும்போது உடல் சமநிலையை இழந்து
தடுமாறும். இதனால் முதுகு வலி வரக்கூடும். கால்களுக்குச் செல்லும் இரத்த
நாளங்கள் கருப்பை வளர்ச்சியால் அழுத்தப்படுவதால் கால்கள் வலிக்கும், வாசனைகளை
முகர்ந்தால் ஒத்துக்கொள்ளாமல் அவ்வப்போது தலைவலி போன்றவை வரக்கூடும்.
*மார்பகங்கள்* : கர்ப்பம் தரித்த பிறகுதான் மார்பகத்தின் வளர்ச்சி
முழுமையடையும். நிறமாற்றங்கள் ஏற்படும். இரத்த அழுத்தம் அந்தப் பகுதிக்கு
அதிகம் செல்வதால் இரத்த நாளங்கள் வீங்கி தொட்டாலே வலிக்கும்.
மார்பகப்பகுதிகளைச் சுற்றி சின்னச்சின்ன முடிச்சுகள் தோன்ற ஆரம்பிக்கும்.
இதெல்லாம் மார்பக மாற்றங்கள். இதை ஏதோ பிரச்சினை என நினைத்து பயப்படகூடாது.

*மூச்சு திணறல்*: கரு வளர்ச்சியடையும் போது கருப்பையானது மேல் நோக்கி அழுத்து
வதால் நுரையீரல் முழுமையாக விரிவடைய இயலாது. இதனால் ஆழ்ந்து சுவாசிக்க இயலாமல்
அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்படும். இது கர்ப்ப காலத்தில் சாதாரணம்.

* மயக்கம்* : இரத்த அழுத்தம் அவ்வப் போது குறைந்துவிடுவதால் களைப்பு,
கிறுகிறுப்பு, திடீர் மயக்கம் போன்றவை ஏற்படக் கூடும். பட்டினியின்றி சாப்பிட
வேண்டும்.
**
*மலச்சிக்கல், மூலநோய்* : ஜீரண மண்டலம் மெதுவாகச் செயற்படுவதாலும், ஹார்மோன்
மாற்றத்தால் குடல் விரிவடைதாலும் குடலுக்கு உணவுப் பொருட்கள் தள்ளப்படுவரில்
தாமதம் ஏற்படும், நீர்ச்சத்துக்களை குடல் உறிஞ்சி விடும். இதனால் மலச்சிக்கல்
ஏற்படும். இது தொடர்ந்தால் மூலநோய் வரும். கருப்பை இடுப்புக் கூட்டை
அழுத்துவதாலும் ஆசன வாயின் சிரை நாளங்கள் வெளி நோக்கித் தள்ளப்பட்டு மூலக்
கட்டிகள் தோன்றும். இந்தப் பிரச்சினை பிரசவத்திற்குப் பிறகு சரியாகிவிடும்
என்றாலும் எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

*கண்களில் மாற்றம்* : திடீர் திடீரென இரத்த அழுத்தம் உயர்வது, குறைவது இயல்பு.
ரத்த அழுத்தம் உயர்வதால் கண்களில் ஏதோ திரை விழுந்ததைப் போன்று இருக்கும்.
பார்வை மங்கலாகும். இதற்குப் பயப்பட வேண்டிய தில்லை. பிரசவத்திற்குப் பிறகு
இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.
**
*ஈறுகளில் அழற்சி* : கர்ப்பத்தின்போது ஈறுகள் மென்மையடைவதால் ஈறுகளில் அழற்சி
தோன்றுவது இயல்பு. கடினமான பொருட்களைக் கடிக்காதீர்கள். பல் பாதுகாப்பில் கவனம்
செலுத்தங்கள்.

*தடையற்ற சிறுநீர்* : கர்ப்பத்தின் அழுத்தம் அதிகரிப்பதால் அதிர்ந்து
சிரித்தாலோ அல்லது பேசினாலோ சிறுநீர் தானாகப் பிரியும். பத்தாம் மாதவாக்கில்
இப்படி சிறு நீர்க்கசிவு தொடர்ந்து இருந்தால் பனிக்குடம் உடைந்திருக்க வாய்ப்பு
உண்டு. எனவே மருத்துவரை பார்க்க வேண்டும். இல்லா விட்டால் குழந்தைக்கு ஆபத்து.

*உறக்கமின்மை* : அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு இருப்பதால் உறக்க
மின்மை ஏற்படும். எந்தப் பக்கம் படுத்தால் சரியாக இருக்கும் என்பது
தெரியாததாலும் இவ்வாறு ஏற்படும்.
**
*நமைச்சல் :* கர்ப்பக் காலத்தில் வயிற்றுப் பகுதியில் வரிக்கோடுகள் தோன்றுவதால்
நமைச்சலெடுக்கும். உடல் முழுவதும் நமைச்சலெடுத்தால் கல்லீரல் பாதிப்
பிருக்கலாம். இந்த பிரச்சினை அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது
நல்லது.

*மூட்டுகள்* : கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாவதால் தசைநார்கள்
தளர்ந்து மென்மையடைந்து விடும். இதனால் உடலிலுள்ள மூட்டுகளில் வலி ஏற்படும்.
ஓய்வு எடுப்பது, உறங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மருத்துவ ஆலோசனையும் தேவை.

*பாலுறவுசிந்தனைகள்* : ஹார்மோனின் ஏற்ற இற்றங்களால் பாலுறவு அதிகரிப்பதும்,
குறைவதும் கர்ப்பக் காலத்தில் இயல்பு.

*மனநிலையில்மாற்றம் *: தாய்மையை நினைத்து சந்தோஷப்பட்டாலும், உடலில் ஏற்படும்
மாற்றங்கள், பிரசவத்தைப் பற்றி பயம் ஆகியவற்றால் திடீரென பயம், கவலை போன்ற
மனமாற்றங்கள் வரலாம். அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறவேண்டும். கருக்காலத்தில்
அதிகமாக வீடு மற்றும் வெளி வேலை செய்வதால் எரிச்சல், கோபம், சோர்வு போன்றவை
ஏற்பட்டு அதன் காரணமாக மன நிலையில் மாறுதல் வரலாம்.

*நீர்கோர்த்தல்* : கர்ப்ப காலத்தில் உடலில் நீர்கோர்த்தல், பனிக் குடத்தில்
நீர் சேருதல் இயல்பு. இதனால் கை, கால்களில் வீக்கம் வருவதும் இயல்பு. பயப்பட
வேண்டாம். நடை பயிற்சி செய்யுங்கள்; ஓய்வெடுங்கள்.

* இதயத் துடிப்பு* : கர்ப்ப காலத்தில் இதயம் மிக அதிகமாகத் தூண்டப்படுவதால்
படபடப்பு அதிகமாகும். பயம் வேண்டாம். சருமம் : சருமத்தில் வரிக்கோடுகள்
தோன்றும். இளமையான சருமம் இப்போது மாறத் தொடங்கும். இது இயல்பு. பெரும்பாலானவை
மறைந்து விடும், சில கோடுகள் இறுதிவரை நீடித்திருக்கும்.

*எடை அதிகரிப்பு* : கர்ப்ப காலத்தில் 12 கிலோவரை எடை அதிகரிக்கும். இதில்
குழந்தையின் எடை, நஞ்சு, தொப்புள்கொடி போன்றவற்றின் எடை, கொழுப்பு போன்றவை
அடங்கும்.
**
*கரு நெளிதல்* : 18 20 வாரங்களில் முதன் முறையாக கரு நெளிதல் ஏற்படும்.
குழந்தையின் உதைப்பு வலித்தாலும், இன்பம் தரக்கூடியது. இந்த உதைப்பு குறைந்து
விட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

*வேலை, ஓய்வு* : கர்ப்பக் காலம் முதல் பிரசவத்திற்குத் தயாராவது என வேலை
செய்வதில் தவறில்லை. ஆனால் போதுமான ஓய்வு தேவை, அலைச்சல் இருக்கக்கூடாது.
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே மருந்து மாத்திரை பயன்படுத்த
வேண்டியிருந்தால் டாக்டரைக் கேட்டு அதன்படி செய்ய வேண்டும். இல்லாவிட்டால்
குழந்தை உருவாகும் போதே குறைபாடுகள் தோன்றலாம்.

பிரசவம் பிரசவிக்கும் போது வலி இருக்கத்தான் செய்யும். இந்த வலி பத்து

க‌ர்‌ப்ப கால ‌பிர‌ச்‌சினைக‌ள்...








க‌ர்‌ப்கால‌த்‌தி‌லவரு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ளல... அ‌தி‌லஒரு ‌சிஒரு ‌சிலரு‌க்கம‌ட்டுமஏ‌‌ற்படு‌ம். பொதுவாஏ‌ற்படு‌மமச‌க்ககூஒரு ‌சிலரு‌க்கஇரு‌க்காது.

ஒரு ‌சிபெ‌ண்க‌ளமச‌க்கஎ‌ன்பதை ‌எ‌ன்னவெ‌ன்றதெ‌ரியாம‌லஇரு‌ப்பா‌ர்க‌ள். எ‌ப்போது‌மபோ‌லசா‌ப்‌பி‌‌ட்டு‌ககொ‌ண்டஇரு‌ப்பா‌ர்க‌ள். வா‌ந்‌தி ‌பிர‌‌ச்‌சினையு‌மஇரு‌க்காது.

எ‌ல்லோரு‌மஇதுபோ‌லஇரு‌க்மா‌ட்டா‌‌ர்க‌ள். மச‌க்கை‌யிலு‌மஒரு ‌சிலரு‌க்கஅ‌திக‌ப்படியாவா‌ந்‌தி, மய‌க்க‌மஏ‌ற்படு‌ம். ஒரு ‌சில‌ரு‌க்கஎ‌ப்போதாவதவா‌ந்‌தி ஏ‌ற்படு‌ம்.

அதுபோ‌ல் கருவுற்ற இரண்டாவது மூன்றாவது மாதங்களில், வளரும் கருப்பை உண்டாக்கும் அழுத்தம் மற்றும் சிறுநீர்ப்பைகளின் உள்ளடுக்கில் ஏற்படும் அழு‌த்த‌த்‌தி‌ன் காரணமாக அடி‌க்கடி ‌சிறு‌நீ‌ர் வருவது போ‌ன்ற உண‌ர்வு ஏ‌ற்படு‌ம். அதுபோ‌ல் அடி‌க்கடி ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌‌க்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம்.

மேலு‌ம், ‌ஒரு ‌சில க‌ர்‌ப்‌‌பி‌ணிகளு‌க்கு க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல்‌ ‌சிறு‌நீ‌ர் தொ‌ற்று‌ம் ஏ‌ற்பட வா‌ய்‌ப்பு உ‌ள்ளது. இது உடலுற‌வி‌ன் மூலமாகவோ அ‌ல்ல‌து ‌பிற‌ப்புறு‌ப்புக‌ள் சு‌த்த‌மி‌ன்‌றி இரு‌ப்பதாலோ ஏ‌ற்படலா‌ம். ‌சிறு‌நீ‌ர் தொ‌ற்று ஏ‌ற்ப‌ட்டா‌ல், ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌க்கு‌ம்போது வ‌லி அ‌ல்லது எ‌ரி‌ச்ச‌ல் ஏ‌ற்படும். வ‌யி‌ற்‌றி‌ன் இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ளிலு‌ம் வ‌லி ஏ‌ற்படு‌ம். இ‌தி‌ல் ஏதேனு‌ம் ஒரு அ‌றிகு‌றி தெ‌ரி‌ந்தாலு‌ம் உடனடியாக மரு‌த்துவரை அணு‌கி ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம். ‌சிறு‌நீ‌ர் தொ‌ற்று ‌‌தீ‌விரமடை‌ந்தா‌ல் கடுமையான கு‌ளி‌ர் கா‌ய்‌‌ச்ச‌ல் போ‌ன்றவை ஏ‌ற்பட‌க்கூடு‌ம். இதனை‌த் தடு‌க்க க‌ர்‌பி‌ணிக‌ள் உடலுறு‌ப்புகளை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்வது‌ம், அ‌திகமாக த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்துவது‌ம் அவ‌சியமா‌கிறது.

ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் மா‌ர்‌னி‌ங் ‌சி‌‌க் எ‌ன்று சொ‌ல்லுவா‌ர்க‌ள். அதாவது க‌‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் காலை வேலை‌யி‌ல் அ‌திகமான மய‌க்க ‌நிலை இரு‌க்கு‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் ‌தீ‌விரமான தூ‌க்க‌ம் ஆ‌க்ர‌மி‌க்கு‌ம். எ‌ந்த வேலை செ‌ய்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம் எ‌ல்லாவ‌ற்றையு‌ம் ஒது‌க்‌கி‌வி‌ட்டு தூ‌ங்க செ‌ன்று ‌விடுவா‌‌ர்க‌ள். இதுவு‌ம் மச‌க்கை‌யி‌ன் ஒரு ‌நிலை தா‌ன்.

க‌ர்‌ப்‌பி‌ணிகளு‌க்கு நூ‌ற்‌றி‌ல் ஒருவரு‌க்கு தோ‌ல் அ‌ரி‌ப்பு‌ப் ‌பிர‌‌ச்‌சினை உருவாகு‌ம் எ‌‌ன்பது பலரு‌க்கு‌ம் தெ‌ரியாது. தோ‌ல் முழுவது‌ம் ‌சிறு ‌சிறு கொ‌ப்புள‌ங்க‌ள் போல ஒ‌ன்‌றிர‌ண்டு தோ‌ன்‌றி அது உட‌ல் முழுவது‌ம் பர‌வி ‌மிகவு‌ம் ‌சிரம‌ப்படு‌த்து‌ம். இது நூ‌ற்‌றி‌ல் ஒருவரு‌க்கு‌த்தா‌ன் வரு‌ம் எ‌ன்பதுதா‌ன் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இத‌ற்கு கு‌றி‌ப்‌பி‌ட்ட மரு‌த்துவ‌ம் எதுவு‌ம் ‌கிடையாது. ‌சில மரு‌‌த்துவ குண‌ம் வா‌ய்‌ந்த சோ‌ப்புகளு‌ம், ஆ‌யி‌ல்மெ‌ன்‌ட்டுகளு‌ம் பலன‌ளி‌க்கு‌ம்.

அதே‌ப்போல த‌ற்போது க‌ர்‌ப்‌பி‌ணிக‌ள் பலரு‌க்கு‌ம் க‌ர்‌ப்ப கால‌ம் முதலே ச‌ளி‌ ‌பிடி‌ப்பது வழ‌‌க்கமா‌கி உ‌ள்ளது. கு‌ளி‌ர் த‌ன்மை கொ‌ண்ட பழ‌ங்க‌ள், கு‌ளி‌ர்‌ச்‌சியான பொரு‌ட்களை அ‌திக‌ம் சா‌ப்‌பிடாம‌ல் த‌வி‌ர்‌ப்பது ச‌ளி‌‌த் தொ‌ல்லை‌யி‌ல் இரு‌ந்து ‌விடுபட உதவு‌ம்.

கர்ப்ப காலம் ஆரோக்கியமாய் அமைய பத்து வழிகள்.


1. சமவீத உணவை உட்கொள்ளல்:

பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.

2. போலிக் அமிலம் மாத்திரைகள்:

நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.

3. தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:

மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.

4. ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:

சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)

5. தவிர்க்கவேண்டிய மருந்துகள்:

கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம். போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.

6. மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:

உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.

7. டோக்சோ பிளாஸ்மோசிஸ்

இது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய். இந்நோய் கற்பகாலங்களில் ஏற்படின் குழந்தைக்குப் பலவகை உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, தோட்ட வேலைகள் செய்யும்போது புனையின் எச்சம் கைகளில் படாமல் இருக்க கை உறைகளை அணியுங்கள். நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.

8. பரிசோதனை நேரம்:

கற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.

9. மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்:

அதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பீயர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.

10. புகை பிடித்தலை தவிர்த்தல்:

எமது கலாசாரத்திற்கு அப்பாற்பட்டதாயினும் மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.

மேலும் சில துணுக்குகள்:

1. நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கற்பகால கையேட்டை எடுத்து செல்ல மறவாதீர்கள். இது ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

2. முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வளக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.

3. நீங்கள் கற்பம் தரித்த நாள் முதல் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை உங்களுக்கு மருத்துவச் செலவும் பல் வைத்தியச் செலவும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து அதைப் பயனபடுத்தலாம்.

4. சிறு வயதில் ருபெல்லா தடுப்புசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கற்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணு;கி தடுப்புசியைப் பெற்றுவிட்டு கற்பமாவது அவசியம்.

5. கற்பகாலத்தின் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் உடலில் அந்த நோயை எதிர்க்க, எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்பதை இரத்தப் பரிசோதனை செய்து அறிய வேண்டும்.

ஆணின் பங்கு என்ன?ஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

1. நல்ல ஆரோக்கியமான உணவு
2. புகைபிடிப்பதைத் தவிர்த்தல் - புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.
3. மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்
4. இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.