பக்கங்கள்

புதன், 23 டிசம்பர், 2009

கலர் கவிதை.........











வண்ணத்துப் பூச்சிகள்......



வண்ண வண்ணசுடிதார்களில்
செல்லம்மாள் கல்லூரி
மாணவிகள் பட்டாம்பூச்சிகளாய்
சிறகடித்துப் பறக்கிறார்கள்.....
ஒரு இரட்டைசக்கர ஓட்டுனர்
அவர்களை சைட் அடித்தபடியே
சிக்னலை கவனிக்காமல்
தடுத்த போலிஸ்காரனை இடித்துவிட்டான்.............
சத்தம் கேட்டு திரும்பிய வண்ணத்துப் பூச்சிகள்............ யாரோ.......


நீயில்லாத நான்
நிலவில்லா வானம்

நீயில்லாத நான்
நிறமில்லா வானவில்

நீயில்லாத நான்
மழையில்லா மேகம்

நீயில்லாத நான்
நீரில்லா மீன்

நீயில்லாத நான்
ஓலியில்லா ஓசை

நீயில்லாத நான்
நிறமில்லா ஓவியம்

நீயில்லாத நான்
இமையில்லா தூக்கம்

நீயில்லாத நான்
துடிப்பில்லா இதயம்

நீயில்லாத நான்
உயிரில்லா உருவம்

நீயில்லாத நான்
முடிவில்லா இந்த கவிதை..........நிகிலன்.....

என் கவிதையின் கருவானவள்..........


என் கவிதையின்
கருவானவள் - அவள்

என் வரிகளின்
உருவானவள் – அவள்

என் மகிழ்ச்சியின்
பிறந்தநாள் – அவள்

என் பகலின்
விழிப்பானவள் – அவள்

என் இரவின்
உறக்கமானவள் – அவள்

என் விழியின்
ஒளியானவள் – அவள்

என் நினைவின்
நிஜமானவள் – அவள்

என் உயிரின்
துடிப்பானவள் – அவள்

என் இதயத்தின்
வாசமானவள் – அவள்

இன்று இல்லை
என்வசம் – அவள்
நிகிலன்.....

நீ என்னை விட்டு...........


நீ என்னை விட்டுப்
பிரிந்து தொலைவில்
சென்று விட்டாய்

நீ தொலைத்த இடத்தில்
உன் நினைவுடன் என்றும்

உனக்காகக் காத்திருக்கிறேன்
யுகங்கள் காத்திருப்பேன்

உன் விழியை
ஒரு முறை காண

உன் மொழியை
ஒரு முறை கேட்க

நீ வருவாயா…?
உனக்காகக் காத்திருக்கிறேன்...............நிகிலன்.....

புலம்பல்


நீ வேறு, நான் வேறல்ல
என்பதாய் வளர்ந்தது
நம் நட்பு

நினைத்துக் கூட
பார்க்கவில்லை
நீ என்னை
பிரிவாய்யென்று

என்னை நீ
மறந்ததை நினைத்து
துடித்துப் போகிறேன்!

எதை நினைப்பேன்
எதை மறப்பேன்

நான் உன்னை
சந்திக்காமலே
இருந்திருக்கலாம்

என் உயிரையும் தாண்டி
சென்று விட்டது
உன் நினைவுகள்

உன்னை மறப்பதா
என்னையே மறப்பதா
முடிவெடுக்க முடியாமல்
தவிக்கிறேன்

உன்னை மறக்க நினைத்தால்
என்னையே மறக்க செய்கிறது
உன் நினைவுகள்...............நிகிலன்......

ஞாயிறு, 29 நவம்பர், 2009

மழை வாசம்...

இதற்கு நான் முதலாளியல்ல...... நண்பர்களின் குட்டி சுவர் போல....... உழைப்பாளியின் டாஸ்மாக் போல மனம் திறக்கும் ஒரு இடம் இது....... உங்கள் எண்ணங்களை வெளிபடுத்த முடியாத வெளிபடுத்த துடிக்கும் எண்ணங்களை.... வெளிப்படுத்தும் மைதானம்......


உங்கள் பதிவிடலை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் :-


iyyadurai.job@gmail.com


*கண்டிப்பாக அவை எண்ணங்களின் வன்புணர்வாய் இருக்க கூடாது.........

திங்கள், 28 செப்டம்பர், 2009

ஒரு கோயாவின் திசை தெரியா பயணம்...........

ஒரு கோயாவின் திசை தெரியா பயணம்........


கோயா- வின் அர்த்தம் பேக்கு... பேக்கின் அர்த்தம் நாந்தான்... நான் ஒரு பேக்கு பையன்... எனக்கு வேறு சில பெயர்களும் உள்ளன.......



என் தம்பிகளுக்கு நான் ...... number one criminal...
என் மகளுக்கு நான் ............. a cheat......
என் மனைவிக்கு நான்........ மோசமான மனுஷன்
எங்க ஊர் பொண்ணுங்களுக்கு நான்



HERO
ஹீரோ
हीरो
హీరో

இன்னும் எத்தனை மொழிகளில் சொன்னாலும் மாறாது.... நான் ஹீரோ தான்.....
இவனின் வாழ்க்கை ஷேர் மார்க்கெட்டை விட சுவாரசியமானது......... வாங்க பழகலாம்............






அறிமுகம்...

பிள்ளையார் சுழி ..........
1964!
கார்எப்படி இருக்கும் ?
கேட்டான் எருமை சிறுவன்
மென் சோகம் பதிலானது........
2000
dad! எருமை எப்படி இருக்கும் ?
மென் சோக பதில் தந்தான்எருமை சிறுவன்..................





காலம் விசித்திரமானது. அதன் போக்கை சொல்ல யாராவது முன் வர வேண்டும். இல்லையேல் அது பல வரலாறுகளை மண்ணோடு மடிய செய்து விடும்.கடற்கரை கால் தடம் போல்.... எனவே நான் கால பைரவனாகிறேன்.......... கதை சொல்ல......

திங்கள், 9 பிப்ரவரி, 2009

காதல்.........

கடவுளால்
காதலிக்கபட்டவள்
மரியாள்
-நான் (பைபிளிலிருந்து)
பெத்தவன் சாபத்த ஒட்டு மொத்தமா வாங்க ஒரே வழி . இந்த காதல் தான். சங்க காலம் தொட்டு சண்டைகளுக்கு காரணமும் என் இனிய காதல் தான். படிச்சவன் படிக்காதவன்... சினிமா டயலாக் நமக்கெதுக்கு . ஆனா வேற வழி இல்ல காதல பத்தி சொன்ன சொல்லும் கவிகள் எல்லாருக்கும் தேவைபடுவது ஒரு ஊடகம். காதலரும் காடு மேடளைந்தனர் ஊடகங்களுக்காக. புறா விடு தூது ஓர் உதாரணம் எனலாம்........











காதல் என்றல் இன்று பலருக்கும் தெரிவது ஒரு ஆண் தன்னை விட குறைந்த அல்லது தனக்கிணையான பெண்ணை படுக்கைக்கு இழுத்து செல்லும் ஒரு வழியாகத்தான் தெரியும்.......... அந்த தேவுடிச்சி மக்களுக்கும் சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு. காரணம் அவர்களும் பாரத தாயின் பிள்ளைகளல்லவா........





என் நாட்டின் பெருமையை நான் சொல்லும் போதே , காதலும் வீரமும் என்று ட்னானே ஆரம்பிக்கிறேன் . பின் காதல் அவ்வளவு முக்கியமா... ஆம் நண்பா அது நம் ரத்தத்தில் ஊறி கிடக்கிறது. நம் முன்னோரிடம். அவர்கள் முன்னோரிடம். ரத்தம் உறையும் வரை ரத்தம் உறைந்த பின்னும் ஊறி ஊரை ஆக்கும் அல்லது அழிக்கும் . புரியவில்லையா முத்து குமரனை பாருங்கள். செத்து சுண்ணாம்பாகி சுன்னாம்பாகியும் கொத்து கொத்தாய் செத்து கொண்டிருக்கும் என் ஈழனை காக்க கை கொடுக்க கேட்டவன். அது காதல்....... காதல் கன்னிகையர் மேல்தான் வர வேண்டும் என்று சட்டம் இல்லையே. என் நாட்டை என் நாட்டை மட்டும் காதலித்து காவு கொண்டும் காவு கொள்ளப்படும் காணாமல் போன என் மூத்த எலும்புகளின் மீது தான் இன்று நான் இஸ்ரோ ராக்கெட்டும் இமாலய சாதனையும் செய்கிறேன்.




காதல்....... எந்தையும் தாயும் மகிழுந்து குலாவியதன் விழைவு இன்று நான். என்தையுடன் அண்டை வீட்டான் இணைந்து இறந்ததில் இன்று என் கையில் இல்லை காலில் சுதந்தரம்..... நம்மை போன்ற மட்டுமொரு தமிழ் குடி சுதந்திரம் கேட்கிறது. ஏதாவது செய்வோம்... ஏதாவது. அணில் எடுத்த கல் என்ன அவ்வளவு பெரியதாகவா இருந்திருக்கும் ? எடுப்போமா ஒரு கல் மட்டுமொரு சுதந்திரத்திற்காய்................... இல்லா விட்டால் கொஞ்சம் காதலாவது செய்வோமே.... சவக் காடான என் ஈழ பூமியில் ஒரு சவக் குழந்தை மீது............................

புதன், 28 ஜனவரி, 2009

சுயம்................

சுயம் போலியானது . ஆம் நம் சுயம் போலி நாம் செய்யும் செயல் மட்டுமே நிஜம் நிஜ உலகின் நிஜம் . செய் அல்லது செத்து மடி . செத்து மடியும் முன் ஏதேனும் செய்வோம் . செய்துதான் பார்ப்போமே என்னவாகிரதேன்று. ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு . ஆக்கபூர்வமாய் ஆக்குவோம் ..................
- ஆமென்
மீண்டும் சந்திப்போம். மிடியுமேன்றால் இவரையும், kodikkaalkurippugal.blogspot.com

சார்ல்ஸ் அந்தோனி......

காஸ்மீரின் ஒரு ஓரத்தில் அந்த மருத்துவமனை. சுதந்திர இந்தியாவும் சுதந்திர பாகிஸ்தானும் அதிகாரபூர்வமாய் பிரிந்ததன் விழைவாய் என் பெண்களின் சீலைகள் எல்லையில் உரியப்பட்டன. எல்லையில் முதலில் போரிட்டது உண்மையில் எங்கள் பெண்கள்தான். பதிலுக்கு எங்கள் பெண்களின் பர்தாக்களும் உரியப்பட்டன. அவர்களும் நேற்று வரை என் குடும்பம் தானே. நேற்று என் வீட்டில் சாப்பிட்ட உமர் பாய் இன்று அந்நியன் போல் என் தாய் மீது பாய்ந்தால் எப்படி சட்டம் ஒழுங்கு இருக்கும். நிற்க.........








விடுதலை புல்கள். ஒரு காலத்தில் இந்த பெயர் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் சொல்லி புரியாது. ஆனால் என் புலி என் வீட்டு வாசலில் என் தலைவனை குதறியபோது என்னால் தாங்க இயலவில்லை. அன்றிலிருந்து அந்த புலி எனக்கு பகையானது. ஆனால் இப்போது என் தமிழ் புலிகள் அங்கு வேதனையில். என்ன செய்வதென்று புரியவில்லை. பழைய பகையை மனதில் கொண்டு என் கண் முன் என் இனம் அழிவதை தடுக்காமல் விட்டு விடுவதா. என் பெண் குழந்தைகள் மேலே சொன்ன அவஸ்தைகளை அனுபவிக்கும் போது நான் என் குடும்ப பகையை நினைவு கூர்ந்து அமைதி காத்தால் நான் வேசி மகன் ஆகி விட மாட்டேனா . நான் என்று தட்டி கேட்பேன் என்று எதிர் பார்த்து காத்திருக்க அவர்கள் என் அருமை இந்தியர்கள் இல்லை. மறவன். அங்கில்லா ஒவ்வொருவனும்,ஒவ்வொருத்தியும் மறக்குடி மக்களாகி வருடங்கள் பலவாயிற்று . என் வயது இப்பொழுது 54. எப்பொழுதோ என் வயதுக்காரன் செய்த தவறுக்காக இப்பொழுது செய்தால் அது தவறு..........................மீதி naalai

ஞாயிறு, 25 ஜனவரி, 2009

வியாழன், 22 ஜனவரி, 2009

தோலுரித்தல்...

இது நீங்க நெனைக்கிற தோலுரித்தல் இல்ல மக்கா. நம்ம திராவிட மக்களோட தண்டனை. தோழா உரிச்சு தொங்க உட்ருவேன் அப்படின்னு சொல்வாங்கல்ல அதுதான். இதோட வழி முறைகள் என்ன தெரியுமா ? தப்பு செஞ்ச மனுசன ஊர் கோடி கோயில்ல [தீர்ப்பு அங்குதான் வழங்கப்படும் ] குனிய வைப்பாங்க அவன் முதுகு முழுவதும் கல் உப்பை பரப்பி ஒரு 25 கிலோ எடை கொண்ட மூட்டையை அவன் முதுகு மேல் வைபபர் காலை முதல் மாலை வரை அவன் அவ்வாறு நிற்க வேண்டும் மாலையில் மூட்டையை எடுத்து விட்டு கை வைத்தால் அவன் தோல் உங்கள் கையில் .....

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

என்னை பற்றி ....

என்னவென்று சொல்ல ! ஆச்சர்யப்படத்தக்க பிறப்பல்ல நான் ; ஆனால் ஆச்சரியங்கள் பிறப்பில் இல்லையே நான் திருநெல்வேலிக்காரன் பழைய திருநெல்வேலிக்காரன் ; இந்த ப்லோக் ஒரு பையனோட வாழ்க்கையும் எண்ணங்களும்... அவனை அவன் தாய் கர்ப்பத்துள இருந்து எனக்கு தெரியும்... எனக்கு மட்டுந்தான் தெரியும்; இன்னும் சிலருக்கும்...,