










நீயில்லாத நான்
நிலவில்லா வானம்
நீயில்லாத நான்
நிறமில்லா வானவில்
நீயில்லாத நான்
மழையில்லா மேகம்
நீயில்லாத நான்
நீரில்லா மீன்
நீயில்லாத நான்
ஓலியில்லா ஓசை
நீயில்லாத நான்
நிறமில்லா ஓவியம்
நீயில்லாத நான்
இமையில்லா தூக்கம்
நீயில்லாத நான்
துடிப்பில்லா இதயம்
நீயில்லாத நான்
உயிரில்லா உருவம்
நீயில்லாத நான்
முடிவில்லா இந்த கவிதை..........நிகிலன்.....

என் கவிதையின்
கருவானவள் - அவள்
என் வரிகளின்
உருவானவள் – அவள்
என் மகிழ்ச்சியின்
பிறந்தநாள் – அவள்
என் பகலின்
விழிப்பானவள் – அவள்
என் இரவின்
உறக்கமானவள் – அவள்
என் விழியின்
ஒளியானவள் – அவள்
என் நினைவின்
நிஜமானவள் – அவள்

நீ வேறு, நான் வேறல்ல
என்பதாய் வளர்ந்தது
நம் நட்பு
நினைத்துக் கூட
பார்க்கவில்லை
நீ என்னை
பிரிவாய்யென்று
என்னை நீ
மறந்ததை நினைத்து
துடித்துப் போகிறேன்!
எதை நினைப்பேன்
எதை மறப்பேன்
நான் உன்னை
சந்திக்காமலே
இருந்திருக்கலாம்
என் உயிரையும் தாண்டி
சென்று விட்டது
உன் நினைவுகள்
உன்னை மறப்பதா
என்னையே மறப்பதா
முடிவெடுக்க முடியாமல்
தவிக்கிறேன்
உன்னை மறக்க நினைத்தால்
என்னையே மறக்க செய்கிறது
உன் நினைவுகள்...............நிகிலன்......