பக்கங்கள்

புதன், 23 டிசம்பர், 2009

கலர் கவிதை.........











வண்ணத்துப் பூச்சிகள்......



வண்ண வண்ணசுடிதார்களில்
செல்லம்மாள் கல்லூரி
மாணவிகள் பட்டாம்பூச்சிகளாய்
சிறகடித்துப் பறக்கிறார்கள்.....
ஒரு இரட்டைசக்கர ஓட்டுனர்
அவர்களை சைட் அடித்தபடியே
சிக்னலை கவனிக்காமல்
தடுத்த போலிஸ்காரனை இடித்துவிட்டான்.............
சத்தம் கேட்டு திரும்பிய வண்ணத்துப் பூச்சிகள்............ யாரோ.......


நீயில்லாத நான்
நிலவில்லா வானம்

நீயில்லாத நான்
நிறமில்லா வானவில்

நீயில்லாத நான்
மழையில்லா மேகம்

நீயில்லாத நான்
நீரில்லா மீன்

நீயில்லாத நான்
ஓலியில்லா ஓசை

நீயில்லாத நான்
நிறமில்லா ஓவியம்

நீயில்லாத நான்
இமையில்லா தூக்கம்

நீயில்லாத நான்
துடிப்பில்லா இதயம்

நீயில்லாத நான்
உயிரில்லா உருவம்

நீயில்லாத நான்
முடிவில்லா இந்த கவிதை..........நிகிலன்.....

என் கவிதையின் கருவானவள்..........


என் கவிதையின்
கருவானவள் - அவள்

என் வரிகளின்
உருவானவள் – அவள்

என் மகிழ்ச்சியின்
பிறந்தநாள் – அவள்

என் பகலின்
விழிப்பானவள் – அவள்

என் இரவின்
உறக்கமானவள் – அவள்

என் விழியின்
ஒளியானவள் – அவள்

என் நினைவின்
நிஜமானவள் – அவள்

என் உயிரின்
துடிப்பானவள் – அவள்

என் இதயத்தின்
வாசமானவள் – அவள்

இன்று இல்லை
என்வசம் – அவள்
நிகிலன்.....

நீ என்னை விட்டு...........


நீ என்னை விட்டுப்
பிரிந்து தொலைவில்
சென்று விட்டாய்

நீ தொலைத்த இடத்தில்
உன் நினைவுடன் என்றும்

உனக்காகக் காத்திருக்கிறேன்
யுகங்கள் காத்திருப்பேன்

உன் விழியை
ஒரு முறை காண

உன் மொழியை
ஒரு முறை கேட்க

நீ வருவாயா…?
உனக்காகக் காத்திருக்கிறேன்...............நிகிலன்.....

புலம்பல்


நீ வேறு, நான் வேறல்ல
என்பதாய் வளர்ந்தது
நம் நட்பு

நினைத்துக் கூட
பார்க்கவில்லை
நீ என்னை
பிரிவாய்யென்று

என்னை நீ
மறந்ததை நினைத்து
துடித்துப் போகிறேன்!

எதை நினைப்பேன்
எதை மறப்பேன்

நான் உன்னை
சந்திக்காமலே
இருந்திருக்கலாம்

என் உயிரையும் தாண்டி
சென்று விட்டது
உன் நினைவுகள்

உன்னை மறப்பதா
என்னையே மறப்பதா
முடிவெடுக்க முடியாமல்
தவிக்கிறேன்

உன்னை மறக்க நினைத்தால்
என்னையே மறக்க செய்கிறது
உன் நினைவுகள்...............நிகிலன்......