இராணுவத்தால் கொல்லப்படாத புலிகளின் தலைவர் பிரபாகரன்
புலிகளின் தலைவர் பிரபாகரன் பத்திரமாக உள்ளார் – என்று தை மாதம் வெளியிட்ட ஆக்கத்தை மீண்டும் பிரசுரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தள்ளப்பட்டுள்ளோம். காரணம் தற்போது வெளிவந்திருக்கும் தகவல் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. தற்போது கைதாகிய மிஸ்டர் சரத்தையே வைத்திருக்கும் இடம் மர்மமாக இருக்கும் போது சரத்திலும் பார்க்க மிக முக்கிய ஒரு புள்ளியின் தகவலையா அப்பட்டமாக வெளியிடப்போகின்றனர்.
பிரபாகரனின் பெற்றோர், மற்றும் பல முக்கிய புலி உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள் பிரபாகரனின் தந்தையின் மரணம் மட்டும் மறைவாக இருந்து, காலப்போக்கில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அரசியல் வித்தகராக தனது காய்களை நகர்த்திய மகிந்தா தொடர்பில் ஒரு முக்கிய சந்தேகம் எளாமல் இல்லை. அரசினால், இறுதிக்கட்ட போரில் யார் கைது செய்யப்பட்டனர், யார் யார் கொலை செய்யப்பட்டனர், யார் யார் தற்கொலை செய்து கொண்டனர்… என்பன போன்ற பல விடயங்கள் சந்தேகத்திற்குள்ளானவையல்ல மாறாக வெளியிடப்படாதவை.
இந்த வகையில், சரத்திற்குத் தெரியாமலே மகிந்த பல இராணுவ நகர்வினை மேற்கொண்டிருக்கின்றார் என்பது இத்தால் புலனாகின்றது. இத்தனை மேடைப்பேச்சிலும் பிரபாகரனின் மரணத்தைப்பற்றியோ அல்லது, இறுதிக்கட்டத்தின் நிகழ்வு பற்றியோ பெரிதும் வெளிவிடாத சரத்திடம் பெரும் இரகசியம் இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழர்களை ஏமாற்றவே சரத்தினுடைய இத்தகை போலிய நாடகம் என்பது புலப்படுகின்றது. இந்தநிலையில் தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடிய விடயம் என்ன வென்றால், புலிகளின் தலைவர் அரசிடம் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளார் என்பதே இப்போதுள்ள சந்தேகமாக காணப்படுகின்றது.
இதன் காரணமே பிரபாகரனின் மரணச்சான்றிதழை (பிரதியினை) இந்தியாவிடமோ, அல்லது பெற்றோரிடமோ, அல்லது அவரின் உறவினரிடமோ, அல்லது ஊடகங்களுக்கோ அறிவிக்காமை என்பது புலனாகின்றது.
தமக்கு வேண்டிய பல தகவல்களை புலிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளவே இந்தபிரபாகரனின் மரணச்சான்றிதழ் தொடர்பான பின்னடைவு என்பதே உண்மையின் வெளிச்சம்.
மேலும் கே.பி.யின் தகவலும் மறைவாகவே இருக்கின்றன… மற்றும் பல விடயங்களை மகிந்தவின் குடும்ப அரசியலில் சிக்குண்ட இலங்கையில், அவருடைய அனுமதியின்றி எவ்வாறான தகவலும் வெளிவராது என்பது அப்பட்டமான உண்மை.
பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்வதற்குக்கூட பெற்றோரை அழைத்துச் செல்லவில்லையே!!! அது ஏன்??? அல்லது கைதான மற்றைய புலிகளின் முக்கிய உறுப்பினர்களை அழைத்துச் செல்லவில்லையே!!!??? அது ஏன்??? மேலும் அவருடைய உறவினர்கள் கூட கைது செய்யப்பட்டு விடுவிக்கவும் பட்டுள்ளனர் அவர்களைக்கூட அழைத்துச்செல்லவில்லையே!!!
இதன் காரணத்தால்தான் இவ்வாறு ஒரு சந்தேகம் எழுகின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரன் அரசின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக, மிக மறைவாக உள்ளார்.
இவ்வாறான மர்மங்கள் சரத்திற்குக்கூட மறைவாக இருந்ததன் காரணமே அரசுடன் முறன்பட நேரிட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. காரணம் தற்போது வெளிவந்திருக்கும் தகவல் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. தற்போது கைதாகிய மிஸ்டர் சரத்தையே வைத்திருக்கும் இடம் மர்மமாக இருக்கும் போது சரத்திலும் பார்க்க மிக முக்கிய ஒரு புள்ளியின் தகவலையா அப்பட்டமாக வெளியிடப்போகின்றனர்.
(10/02/2010ல்) விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு இதுவரை வழங்கவில்லை என்று சி.பி.ஐ. இயக்குனர் தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்தச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது :
"இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக, அவரைப்போல் தோற்றம் உடைய உடலைக் காட்டி இலங்கை அரசு அறிவித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி ஆவார்.
எனவே, இந்த வழக்கு விசாரணைக்காக, பிரபாகரனின் மரண சான்றிதழை அளிக்குமாறு இலங்கை அரசிடம் சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது.
சமீபத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த சி.பி.ஐ., பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு இன்னும் அனுப்பவில்லை என்று கூறியது.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டில்லியில் பேட்டி அளித்தபோது, பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு அனுப்பி விட்டதாக கூறினார். இதனால் இவ்விவகாரத்தில் குழப்பம் நிலவியது.
இந்நிலையில், பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு அளிக்கவில்லை என்று சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,
"பிரபாகரனின் மரண சான்றிதழை அளிக்கும்படி இலங்கை வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ. கோரியுள்ளது. விரைவில் அது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்த ஆவணமும் அளிக்கப்படவில்லை.
இலங்கை அரசு அளிக்கும் எந்தவொரு ஆவணத்தையும் நீதிமன்றில் தாக்கல் செய்வோம். அதன்பிறகு வழக்கை முடித்துக்கொள்வது பற்றி நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும்.
ராஜீவ் கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி நளினியின் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை நளினி விடுதலை செய்யப்பட்ட பிறகு, அவரது நடமாட்டத்தை கண்காணிக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தினால், அதற்கான நடவடிக்கைகளை புலனாய்வு அமைப்புகள் மேற்கொள்ளும்" என்றார்."
எனவே பிரபாகரனுடைய மரணம் தொடர்பாக மர்மத்தை மேலும் அதிகரிப்பதால் இலங்கை அரசும் இந்திய அரசும் மேலும் பல விடயங்களை அறிய முற்டுகின்றனர் என்பதே இதிலிருந்து புலப்படுகின்றது. தேர்தலின் போது வாய்திறக்காத சரத்தும், இதுதொடர்பாக பெரிதாக அறிந்திருக்கவில்லை என்பதும் புலனாகின்றது. மகிந்த குடும்பத்தினருக்கு மட்டும் தெரிந்த இந்த விடயம் ஒரு வேளை மகிந்த பிரபாகரனை வேறு குறிப்பாக )போரில் அக்கறைகாட்டிய நாடுகளில்சில…) ஏலம் போட்டுள்ளாரோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக