பக்கங்கள்

புதன், 23 டிசம்பர், 2009

என் கவிதையின் கருவானவள்..........


என் கவிதையின்
கருவானவள் - அவள்

என் வரிகளின்
உருவானவள் – அவள்

என் மகிழ்ச்சியின்
பிறந்தநாள் – அவள்

என் பகலின்
விழிப்பானவள் – அவள்

என் இரவின்
உறக்கமானவள் – அவள்

என் விழியின்
ஒளியானவள் – அவள்

என் நினைவின்
நிஜமானவள் – அவள்

என் உயிரின்
துடிப்பானவள் – அவள்

என் இதயத்தின்
வாசமானவள் – அவள்

இன்று இல்லை
என்வசம் – அவள்
நிகிலன்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக